செவ்வாய், 24 டிசம்பர், 2013



             குரு காயத்ரீ மந்திரம்
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்

சூரியன்
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி!
சூரியா போற்றி! சுந்தரா போற்றி!
வீரியா போற்றி! வினைகள் களைவாய்

சந்திரன்
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி! திருவருள் தருவாய்
சந்திரா போற்றி! சற்குணா போற்றி!
சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி!

அங்காரகன் (செவ்வாய்)
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி!
அங்காரகனே அவதிகள் நீக்கு!

புதன்இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி!
பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி!

குரு
குணமிகு வியாழக் குருபகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ;
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய்

சுக்கிரன்
சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய்
வக்ரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

சனி
சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே!
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே
இச்சகம் வாழ இன்னருள் தா தா
ராகு
அரவெனும் ராகு அய்யனே போற்றி!
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகஅருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்மியா போற்றி!

கேது
கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி! பாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத்தேவே கேண்மையாய் ரஷி
P


சனி, 9 நவம்பர், 2013

வாழ்க்கை




                     வாழ்க்கை என்பது ஒரு படகு ஆகும் ................ அதை முறையாக 
கற்றவர்கள் கரையை அடைகின்றனர் ,  அரைகுறையாக கற்றவர்கள் 
இன்னும் மிதக்கின்றனர் .............இதையெல்லாம் புரிந்துகொள்ளாதவர்கள் 
மூழ்கி இறக்கின்றனர் 

                       வாழ்க்கை என்ற படகிற்கு துடுப்பு எவ்ளவு முக்கியமோ .......
அதைப்போல நம் வாழ்க்கையை வழிநடத்தி செல்ல ஜோதிடம் என்னும் 
துடுப்பு மிக அவசியம் 

                            துடுப்பை பயன்படுத்தி கரையை நாம் எப்படி கடக்கின்றோமோ 
அதைப்போல் நம்முடைய வாழ்க்கையை ஜோதிடம் மூலம் பின்பற்றினால் 
மகிட்ச்சியாக வாழ்க்கை பயணம் இருக்கும் 

                             தேர்ந்து எடுத்து செல்வது உங்கள் கடமை 

சாரஜோதிடம் மூலம் உங்கள் சரியான பிறந்த நேரத்தை கொண்டு கணிப்பதுதான் மிகச்சிறந்தது ............ராசி யை  வைத்து பலன் கண்டறிவது 
சிறப்பல்ல 
                              ஒரே நேரத்தில் , ஒரே இடத்தில , பிறக்கும் இரட்டை 
குழந்தைகள்  ஒரேமாதிரியான பலன் இருக்காது அவர்கள் குணாதிசியங்கள் 
மாறுபட்டு இருக்கும் ,  அவர்களுடைய திறமைகள் ஒரேமாதிரியான தாக 
இருக்காது அப்படி இருக்கும்போது ராசியை வைத்து எப்படி பலனை பார்க்கமுடியும் இது முற்றிலும் தவறு 

செவ்வாய், 5 நவம்பர், 2013

NUMAROLOGY




         

                                                                                                                                                                                                                                                                                                                                        R A J A          2+1+1+1 =   5          Lucky  num 5

ஞாயிறு, 3 நவம்பர், 2013




                                      உயர்கணித சாரஜோதிட முறையில் உங்கள் 
              ஜாதகம் கணித்து உங்கள் ஆரோக்கியம், திருமணவாழ்வு,  தொழில் 
              வேலைகள்,  காதல், சுயகௌரவம், சுயமுன்னேற்றம் ,அரசியல்,
               ஆண்மிகம், ஆகியவற்றை அறிந்து வாழ்க்கையில்   வெற்றி 
                அடையுங்கள் 

                               ஜாதகத்தில் பதினோரு பாவங்கள் நன்றாக இருந்தாலும் 
                லக்னபாவம் சரியாக அமையாவிட்டால் அந்த ஜாதகர் எந்த
               வகையிலும் முன்னேற்றம் இருக்காது 

                                 ஜாதகத்தில் சூரியன் என்ற கிரகம் 8,12 பாவங்களை
                   தொடர்புகொண்டால் அவர் அரசியலில் ஈடுபட்டு வெற்றியடைய 
                    முடியாது 

                                புதன் கிரகம்  8,12 பாவங்களை தொடர்புகொண்டால் 
                       அந்த ஜாதகர் உயர்கல்வி படிக்க இயலாது இத்துடன் ஒன்பதாம் 
                        பாவத்தையும் பார்க்கவேண்டும்  

                                  

வெள்ளி, 1 நவம்பர், 2013

நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்