சனி, 20 ஜூலை, 2013

                                                                   ஜாதகம்

                       ஒருவருடைய ஜாதகத்தை எடுத்துகொண்டால் அதில் 12 பாவங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாவத்திற்கும் பலன்கள் சொல்லப்பட்டுள்ளன

   1,லக்ன பாவம் :  லக்னம் என்பது ஜாதகத்தின் உயிர்  இது சுயசிந்தனை, செயல்திறன்,மற்றும் தலைபகுதி ,மூளை ,கௌரவம் ,அந்தஸ்த்து,அதிகாரம் ,ஆரோக்கியம் ,ஜாதகரின் தனி திறமை இவை யாவும் அடங்கும் 

   2,  இரண்டாம் பாவம்  கண், பல், வாய்,  பேச்சு, முக்கியமாக தனஸ்தானம்                         அதாவது பணத்தை தரும் இடம் , ஒருவர் எப்படி பட்ட செல்வந்தர்                            என்பதை இந்த இடத்தை வைத்துதான் சொல்லவேண்டும் 

    3,  மூன்றாம் பாவம் காது, தோள்பட்டை, நரம்புகள் , ரத்தநாளங்கள், 
             தகவல் தொடர்பு, கம்பியூட்டர், செல்போன், கேபிள் டிவி, இன்டர்நெட்,
          சிருதூரபிராயணம், மற்றும் மாற்றங்களை கொடுக்க கூடியது,
           குறிப்பாக இளைய சகோதரனை குறிக்கும் இடம் 

     4,  நான்காம் பாவம் :  நுரையீரல் அதாவது உற்பத்தியை குறிக்கும்,
           மற்றும் வீடு,வாகனம்,நிலம் போன்றவற்றையும்,தாயை பற்றி 
            அறியும் இடம் 

     5,   ஐந்தாம் பாவம் :  காதல், கவர்ச்சி, குழந்தை, மகிட்ச்சி,பூர்வ புண்ணியம் 
            போன்றவை பற்றி அறியும் இடம் ,இது ஜாதகத்தில் முக்கியமான 
              இடமாகும் 

      6,  ஆறாம் பாவம் :  ஆறாம்பாவம் என்பது அடிமை தொழிலை குறிக்கும் 
             அதாவது அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பது, மற்றும் வெற்றி,கடன்,
              நோய் அதாவது இந்த பாவத்தை வைத்துதான் ஒருவருக்கு நோய் உண்டாவதை கண்டோரியமுடியும் ,    

          7,  ஏழாம் பாவம் ஒருவருக்கு மிக முக்கியமான பாவம் ஆகும் 
               திருமணவாழ்க்கையை இந்த பாவம்தான் நிர்ணயம் செய்கிறது 
               கிட்னியை பற்றி தெரிந்துகொள்ள இந்தபாவம் முக்கியம்,
               மேலும் ஒருவருடைய தொழிலை பற்றி தெரிந்துகொள்ள இந்த 
                 பாவம் முக்கியம் ,  எப்படி பட்ட மனைவி அமைவாள் , மனைவி மூலம் வருமானம் உண்டா, ஜாதகருக்கு தொழிலில் வெற்றியடைய முடியுமா 
             என இந்த பாவத்தை கொண்டுதான் சொல்ல முடியும் 

            8,   எட்டாம்பாவம் ஆயுள் பாவம் இந்த பாவத்தை வைத்து ஒருவருக்கு
                    திடீர் பணவரவு பற்றி சொல்லலாம், அதாவது எதிர்பாராமல்
                       வரும் பணம், ஆனாலும் இந்தபாவம் ஜாதகருக்கு ஒரு சிறப்பான
                    பாவம் அல்ல ஏனென்றால் இந்தபாவம் வலி,வேதனைகள்
                     கழ்ட்டத்தை தரக்கூடிய பாவம் ஆகும்

             9, ஒன்பதாம் பாவம் பூர்வ புண்ணியஸ்தானம் ஆகும்,இந்தபாவம் 
                      ஒருவருக்கு  தன் தந்தையை பற்றியும் , ஆன்மிகத்தை பற்றியும் 
                  சொல்லப்படும்

              10, பத்தாம் பாவம்  ஒருவரின் தொழில் அந்தஸ்த்தை பற்றி அறியும் பாவம்

               11, பதினொன்றாம் பாவம் ஒருவருக்கு சந்தோசம்,நண்பர்கள்,தாய்மாமன்,போன்றவைகள் 
                   பனிரெண்டாம் பாவம் விரயஸ்தானம் ஆகும் , இரண்டாவது தொழிலும் இந்தபாவம் தான் 

2 கருத்துகள்:

  1. கருத்துகள் சொல்ல முன்வரவும் முகநூல் நண்பர்கள்

    பதிலளிநீக்கு
  2. ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் 006-0163526064, 006-0176143848

    பதிலளிநீக்கு